17 March, 2007


விழித்திடாதே மனமே

எழுதுகோலை எடுக்கும் போதெல்லாம்
எண்ணங்களின் அலைகள்
எண்ணியதெல்லாம் சொல்ல
எண்ணம் தான் விடுமோ???
மனதின் அலைகளைமறைப்பது எங்கணம்??
மனதே நீ ஒரு தாழ்பாள் தா
மனதை மனதால் பூட்டி வைக்கிறேன்
மனிதம் மறந்த நெஞ்சங்களுக்கு
மனதின் ஓசை எதற்கு ??
மனதே நான் உனை வெல்ல
கொஞ்சம் மனது தான் வையேன் மெல்ல.
மனது கிடந்து தவிக்கிறது
இந்த மனதை வெற்றி கொள்ள
மனதே நான் உனை வெல்வேன்
மனித நேயம் கொன்று அல்ல
மனச்சங்கிலியால் பூட்டி
மனச்சிறையில் அடைத்து
மனதே உனை மறைத்து விட்டேன்
மறந்தும் நீ விழித்திடாதே !!!

sunshine





I rise with hope in my eyes;
some where do i see a ray ;
i grope
to reach it.
A smile lingers;
the heart swells as i think
there might be a morrow.
The ray reaches;
The sweet heatfilling up my soul;
I stand transfixed,
watching me soar

I dream ,i will,I aspire;
one step i venture to take ,
I may not reach the sun
but might bask in it.

The sweet expectationsof a sunny world,
gives me strength;
And towards it i march
'coz i decide to win.



15 March, 2007

எறும்புகளைக் கொல்வதில்லை


வரிசை மாறாமல் போவதில்
ஒழுக்கதின் உதாரணம்
ஆகையால் எறும்புகளைக் கொல்வதில்லை

ஒன்றிறக்க மற்றவை தவிப்பதில்
அன்புக்குதாரணம்
எறும்புகளைக் கொல்வதில்லை
பலமடங்கு எடை சுமப்பதில்
பலத்தின் உதாரணம்
எறும்புகளைக் கொல்வதில்
ஓய்வின்றி உழைப்பதில்
சுறுசுறுப்பின் அடையாளம்
எறும்புகளைக் கொல்வதில்லை

மழைக்காக சேமிப்பதில்
முன்னெச்சரிக்கையின் சின்னம்
எறும்புகளைக் கொல்வதில்லை

முன்னேறத் துடிப்பதில்
முயற்சியின் இலக்கணம்
ஆக எறும்புகளைக் கொல்வதிலை

இத்தனை இருந்த போதும்
காதல் வாழ்வு உள்ளதா ??
அது அறிய நிச்சயம்
எறும்புகளை கொல்லமாட்டேன்

02 March, 2007


அம்மா
எங்கெல்லாம் தேடுவேன்??
உனை எப்படியெல்லாம் தேடுவேன்??
என்று தான் நிறுத்துவேன்
காண்பதில்லெல்லாம் உனை தேடுவதை???
எனக்கே எனக்கென
நாளெல்லாம் மலரும் செம்பருத்தியா?
பள்ளிக்கு செல்லும் போது
கூடப் பறக்கும் பட்டாம்பூச்சியா??
மதியம் என் உணவை
பகிற வரும் கருங்காக்கையா??
காலாற நடக்கும் சமயம்
காலையே தொடரும் நாய் குட்டியா?
ஜன்னலை திறக்கும் போதெல்லாம்
எட்டிப் பார்க்கும் சிட்டுக்குருவியா??
மேட்டுவளை நோக்கி சிந்தித்திருக்கும் சமயம்
சகுன சத்தமிடும் பல்லிக்கூட்டத்திலா??
அம்மா!!என கால் அடி பட்டு கதறுங்கால்
ஐயோ!!! என பதறும் மூதாட்டியா??
அன்பைக் காணும் போதெல்லாம்
அம்மா உனைக் காண்கிறேன்!!!
என் மகளாய் பிறக்க
இப் பிறவியில் இயலாதெனில்
அடுத்த வீட்டுக்குழந்தையாகவாவது வா
என் மடியில் அமர்ந்து கொஞ்ச!!!!!!